_சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒவ்வொரு மாதமும் தினமும் சிறுகுறு குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல், பெண்களுக்கு எதிரான சம்பவங்கள், திருட்டு, தற்கொலை என குறைந்தபட்சம் ஒரு வழக்காவது பதிவாகும்.
ஊரடங்கால் இத்தகைய குற்ற சம்பவங்கள் முழு அளவில் இல்லாத நிலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டது. ஒருவகையில் மனித சமுதாயத்திற்கு தாங்க முடியாத சிரமங்களை தரும் கொரோனா மறுபுறம் குற்றங்கள் இல்லாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது._
ஆனால், . ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 24 முதல் நேற்று முன்தினம் 18ம் தேதி வரை உள்ள சுமார் 50 நாட்களில் 50 பெண்கள் மாயமானதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பள்ளி மாணவிகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில், பலர் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். என்றாலும் கூடகொரோனா ஊரடங்கு 50 நாட்களில் 50 பெண்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது_*
ராஜகர்ஜனை (சமூக நலம்)